|
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் - சமுக எழுச்சி மாநாடு
வருகிற பிப்ரவரி 20,21ம் தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுகூட்டம் மற்றும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக எழுச்சி மாநாடு தெருமுனைப் பிரச்சாரம் வி.களத்தூர் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 07ம் தேதி நடைப்பெற்றது.
சரியாக மலை 6.45 மணிக்கு வி.களத்தூர் நகரத்தலைவர் சகோ அப்துல் ரஹீம் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார் மாவட்டத் தலைவர் சகோ. அபுபக்கர் சித்திக் அவர்கள் சமுக எழுச்சி மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றியும் மற்றும் முஸ்லிம்களின் நிலையைப்பற்றியும் விரிவாக பேசினார். இப்பகுதி மாற்று மத சகோதரர் பெரியார் நேசன் அவர்கள் சிறிது நேரம் பேசினார்
இருதியாக சகோ. முஹம்மது யாகூப் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
|