வி.களத்தூருக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் 14-அக்டோபர் புதன்கிழமை வி.களத்தூர் வருகை புரிந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக வி.களத்தூருக்கு வருகை புரிந்த அமைச்சர் வி.களத்தூர் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.
முன்னதாக மில்லத் நகர் சென்று கொடி ஏற்றி பொதுமக்களிடம் உரையாற்றினார். அதன்பின் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜித் சென்று ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்களை சந்தித்தார்.அதைத்தொடர்ந்து ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டார். புதிய தண்ணீர்த் தொட்டி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை கணிவாகக் கேட்டறிந்த அமைச்சர் அந்த மனுமீதான கோரிக்கைகளை விரைந்த செய்து தருவதாக கூறினார்.
|